ஞாயிறு, 22 அக்டோபர், 2017

26-7-2017 சங்கத்தமிழ்க் கவிதைப்பூங்கா==கண்ணே உன் காதல் மறவேனே


வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 26/07/2017நடந்து முடிந்த காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் A Muthu Vijayan Kalpakkam
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
கண்ணே உனைக் கண்ட நாள் முதலா
என்னை மறந்தே போனேன் நான்
அன்றும் இன்றும் என்றும் உன் நினைவுதான்
அன்பினால் என்னை ஆட்கொள்ளுவதும் நீதான்
இன்னல் பட்ட போதெல்லாம் ஆறுதல் கூறி
இனிய வார்த்தைகள் கூறியவளும் நீயே
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவினரிடம் முறையிடுவேன் என் உணர்வுகளை
செம்பவள வாய் அழகி உன் எழில் என்
சின்ன இரு கண்களுக்குள் அடங்க வில்லையடி என்
உள்ளமெனும் வீடெங்கும்
உன்னுருவம் தான் நிறைந்து கிடக்கிறது
முள்ளும் மலரும் மை கொஞ்சும் விழியில்
கல்லும் கனியும் நீ சொல்லும் மொழியில்
சொல்லும் பொழுதெல்லாம் இனித்திடும் உன் பெயர்
வெல்லும் விழியில் விழுந்தவன் நானே
போற்றாத நாளில்லை கண்ணே உன்னை
பொருளோடும் புகழோடும் வாழவைப்பேன் உண்மை
கண்ணே உன் காதல் மறவேனே
உன்னை எண்ணி நாளும் வாழும் என்
உள்ளம் எண்ணிப்பாரு நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக