புதன், 28 ஜூன், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா -------------11/06/2017-----------காதல் கவிதை

Image may contain: 3 people


வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 11/06/2017நடந்து முடிந்த ககாதல் விதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் ஆ.விஜயலெட்சுமி
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
உன்னைக்காணாத கண்ணும்
உன்னைக் கண்ட நாள் முதலா
என் தூக்கம் போனது
உன் நினைவு கொல்வதனால்
என் மனமும் சாகுது
கண்ணுக்குள்ளே காந்தம் வச்சு
என்னை நீ ஈர்த்திட்டே
உன்னோடு ஒட்டிவிட்ட மனசை
என்னாலும் பிரிக்க முடியலே
ஒத்தையிலே அலையுறேன்
நித்தமும் வேகிறேன்
உன்னையே நினைச்சு மனம்
உன்மத்தம் ஆகிறேன்
வண்ணக்கிளியே சீக்கிரம் வாராயோ
எண்ணத்தை புரிஞ்சு வாட்டம் தீராயோ
உன் நினைவில் உறக்கமின்றி
உயிர் உருகி நிற்கிறேன்
சோகம் சொல்லிவிட்டேன் விரிவாக
சுகம் நல்க நீ வருவாயா
காலமெல்லாம் காத்திருப்பேன்
கன்னி உன்னைச் சேரவே
உன்னைக் காணாத கண்ணும் வீணே
உன்னை எண்ணாத நெஞ்சும் பாழே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக