வெள்ளி, 12 மே, 2017

செய்யுட்கலைச்சூடிகை


April 3
இனிய மதிய வணக்கங்கள் கவிஞர்களே...
29-03-2017 அன்று நடைபெற்ற #புதுக்கவிதைப்_போட்டி_முடிவுகள்
நடுவர் : கவிதாயினி சிவதர்சினி ராகவன் ( Ragavan Sivatharsini )
தலைப்பு : #மாறுகின்ற_உலகில்_நீ_மட்டும்_மாறாமல்
---------------------------------------------------------------------------
#வெள்ளிச்_சூடிகை_வெற்றியாளர்
1.கவிதாயினி ஸமான் லாபிர்
#சூடிகை_வெற்றியாளர்கள்
1.கவிதாயினி சரஸ்வதி ராசேந்திரன் ( Saraswathi Rajendran
.மாறுகின்ற உலகில் நீ மட்டுமே மாறாமல்
எண்ணத்தில் நேர்மை
செயல்களில் தூய்மை
உன்னக அன்பிற்கு
ஈடு ஒன்றுமில்லை
நல்லவை மட்டுமே
நாளும் செயல் படுத்துவாய்
இன்பத்திலும் துன்பத்திலும்
தூரம் போகாமல் தூணாய் துணையிருப்பவள்
தன் ஆசை அகற்றி
தன் குழந்தைகள் நலனே என
அன்றாடம் வாழும்
அன்பு தெய்வம் நீ
மாறுபடும் மருமகள் அவளின்
மக்களினம் அத்தனையும்
வேறுபடாமல் வேர் அறுவாமல்
உயர வைக்கும் உள்ளத்தினள்
ஓய்ந்தாலும் சாய்ந்தாலும்
ஓடோடி வந்து நின்று
பாய்ந்து பிழைக்கச்செய்வாய்
பிள்ளைகள் பால் உள்ள அன்பால்
மாறுகின்ற உலகில் நீ
மட்டும் மாறாமல்
உருகும் பனிக்கட்டி
ஓடிவரும் நீர்போல் அன்பை
பருகத்தருவது எப்படியம்மா ?
காலத்தால் மாறாத
காட்சி உண்டென்றால்
அன்னையின் அன்பு ஒன்றுதான்
ஞாலத்தை காக்கிறது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக