வியாழன், 16 மார்ச், 2017

அமிர்தம் குழுமத்தில் கடந்த 10/03/17 மற்றும் 11/03/17 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்ற கிராமிய கவிதைப்போட்டி

நமது அமிர்தம் குழுமத்தில் கடந்த 10/03/17 மற்றும் 11/03/17 ஆகிய இரண்டு நாட்கள் நடைப்பெற்ற கிராமிய கவிதைப்போட்டியில் சிறந்த முறையில் கவிதை எழுதி சான்றிதழ் பெறுகிறார் கவிதாயினி திருமதி. Saraswathi Rajendran அவர்கள்.
கவிதாயினிக்கு அமிர்தம் குழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்
நாட்டுப்புறப்பாடல்--10-2017
அந்தி சாயும் நேரத்துல
ஆத்தோரம் போற புள்ளே
அத்தை மகள் ரத்தினமே
முத்தம் ஒண்ணு தந்துபோடி
தேடித்தேடி நான் அலைஞ்சேன்
தித்திக்கும் உன் பெயரைச்சொல்லி
பாடி உருகி ஏங்குறேனே
பாவி மகள் உனக்கு கேட்கலையா ?
உன்னையே எண்ணி எண்ணி
உற்சாகம் நானடைந்தேன்
ஆலவாய் கரும்பு போல நானும்
ஊருல வெறும் வாய்க்கு அவலானேன்
கண்ணு ரெண்டும் மூடாம
உன்னை எண்ணி நூலானேன்
வாசக் கருவேப்பிலையே
நேசத்தோடு வந்துவிடு
கட்டிக்கப் போற பெண்ணே
ஒட்டிகிட்டாத் தப்பில்லே
மஞ்சத்தாலி கொண்டு வாரேன்
மல்லிகைப்பூ பழம் வெத்திலையோடு
பரிசம் போட நாளைவாரேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக