புதன், 8 மார்ச், 2017

சங்கத் துமிழ்க் கவிதைப் பூங்கா ----கிராமிய கவிதைப் போட்டி---09/01/2017

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே.
சங்கத் துமிழ்க் கவிதைப் பூங்காவில்
09/01/2017ம் நாள் நடைபெற்றர் கவிதை எழுதிய
கிராமிய கவிதைப் போட்டியில்
கவிதை எழுதிய கவிஞர்
சரஸ்வதி ராஜேத்தின்  சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார் அனைத்து பாவலர்களுக்கும்
வாழ்த்துக்கள்
நடுவர் பணியாற்றி சிறப்பான கவிதைகளை தேர்வு செய்த
கவிதாயினி ஜெய சுதா
அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தலைமை நிர் வாகி
ந. பாண்டியராஜன்
கிராமியக்கவிதை
அக்கம்பக்கம் யாரும் இல்ல
ஆசை முத்தம் தாடி புள்ள
மஞ்சப் புடவைக்காரி
இஞ்சி இடுப்புக்காரி
நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு
நெருப்பா எரியுதடி
அஞ்சுகமே கெஞ்சுறேன்
மஞ்சத்தாலி போடுறேன்
மாமன் மனச புரிஞ்சுக்கோ
மரிக்கொழுந்தே வாடி புள்ள
ஓடப்பக்கம் வாடி நீ
கூட நானும் வாரண்டி
சோலைக் குயில்போல நாம
சொக்கி கிடப்போம் வாடி நீ
சந்தையிலே மல்லிகைப்பூ
சரமா விற்குதடி உன்
கூந்தலிலே முடிஞ்சுக்க
வாங்கித் தாரேன் வாடி நீ
கட்டப்போற புருஷன் நான்
தொட்டால் என்ன பாவம்டி
கிட்ட வந்து பேசுடி நான்
கெட்ட மனுஷன் இல்லடி
தங்கமே நீ வரவேணும்
தஞ்சமே தர வேணும்
நம்பி வந்த எனக்கு
நம்பிக்கை தர வேணுமடி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக