சனி, 31 டிசம்பர், 2016

18-12--2016 முத்தமிழ்க் கலம்

முத்தமிழ்க்களம்
நட்புறவுகளுக்கு வணக்கம்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •
எமது களத்தில்
13 / 12 / 2016 முதல் 18 / 12 / 2016 வரை
நடைபெற்ற புதுக்கவிதைப் போட்டியின்
முடிவுகள்.
தலைப்பு - எனது உயிரே உனக்காக
வெற்றிவாகை சூடிக்கொள்கிறார்
<><><><><><><><><><><><><><><><><><>
கவிதாயினி . சரஸ்வதி ராசேந்திரன்
<><><><><><><><><><><><><><><><><><>
அவர்களுக்கு
முத்தமிழ்க்களம் குழு
நிர்வாகிகளின் பாராட்டுக்கள்
இவர்களுடன்
உங்கள் கவிப் பிரியன்

எனது உயிரே உனக்காக
நித்தம் உன் வரவுக்காக காத்திருந்து
தத்தளிக்கும் உள்ளமதை கவிதையாக
முத்தமிழ்களத்தில்வந்துமுறையிடுகிறேன்
பித்தம் தலைக்கேறி புலம்பி தவிக்கிறேன்
நெஞ்சார உருகி நித்த நித்தம் தேடுகிறேன்
பிஞ்சான என் மனதை பஞ்சாக பறக்க விட்டு
காடான பாதையெல்லாம் கால் கடுக்க நடக்கிறேன்
மேடான மலையில் கூடஏறி தேடுகிறேன்
கோயிலுக்குச் சென்றாலும் குழந்தைகளை பார்த்தாலும்
தாயெனக்கு உன் நினைவுதான் தாவி வருது
நாயினுக்கும் கீழாக நான் அலைகிறேன் உன் நினைவால்
எனது உயிரே உனக்காக நானிருந்தும்
உனது உயிரை கூற்றுவன் கொய்தானே
விடியாத துயர் சூழ்ந்த உலகில் நான்
வீழ்ந்தே நொறுங்கி கிடக்கிறேன் நாளும்
வருவேன் உன்னிடம் விரைவில்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக