புதன், 3 ஆகஸ்ட், 2016

வல்லமை புகைப்படபோட்டி ,69

வல்லமை புகைப்படபோட்டி ,69
பாராட்டிற்கு நன்றி வல்லமைகுழுவிற்கும் முனைவர் காயத்ரி பூபதிக்கும்
விளையாட்டு உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மனப்பயிற்சியும் கூட. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவதொரு வாழ்க்கைக்கேற்ற பாடம் இருக்கும். அந்த வகையில் எவ்வளவு தான் அலைகள் வந்து அலைக்கழித்தாலும் சளைக்காமல் மணலில் வீட்டைக் கட்டும் சிறுவர்களின் விளையாட்டில் கடமையுணர்வும், விடாமுயற்சியும் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார் சரஸ்வதி இராசேந்திரன். கவிஞருக்கு பாராட்டுகள்.
அலைகள் வந்து வந்து
அலைக்கழித்தாலும்
கலையாத மனதுடன்
விட்ட இடத்திலிருந்து வீட்டை
கட்டி முடித்தஇந்த சிறுவர்கள்
கடைமை யுணர்வு கொண்டவர்கள்
வெற்றிக்கனியை விடா முயற்சியால்
எட்டிப்பிடித்து கொடியையும் நாட்டிவிட்டனர்
மணல் வீடானாலும் அவர்களின்
மன வீடு இது மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா?
கற்பனைத் திறத்துடன்
காரியம் ஆற்றிடும்
விற்பனர்கள் இவர்கள்
இவர்களே !
நாளைய கட்டடத்தின்
செங்கற்கள்
எதிர்காலச் சூரியனை
உருவாக்கப்போகும்
ஒளிக்கற்றைகள்
பார்வையாளர்கள் அல்ல
படைப்பாளிகள் !
பாராட்டித்தட்டிகொடுப்போம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக