வியாழன், 4 ஆகஸ்ட், 2016

தமிழ் பட்டறை பகுதி -24 கதைபோட்டி

தமிழ் பட்டறை --பகுதி 24
தன் ஒரே மகள் சுவாதி வேற்று ஜாதி மனிதனை மணந்து கொண்டதில்
கோபமும் ஆத்திரமும் வீறுகொண்டெழுந்தது. ரெங்க நாதனுக்கு
’’அம்மா இல்லாத பெண் என்று உனக்கு இடம் கொடுத்தது தவறுன்னு இன்னைக்கு உன் செயலாலே நிரூபிச்சிட்டே .இப்படி செய்ய உனக்கு வெட்கமாயில்லே வெளியூரில் உன்னைத் தங்கி படிக்க வைத்தது இதற்குத்தானா? என் வைதீக பூஜை புனஸ்காரத்திற்கு இது ஒத்துக்கொள்ளாதுன்னு தெரிஞ்சும் ….’’
‘’போதும்ப்பா நிறுத்துங்க,அப்பா இவரைப்போல தங்கமான மனுஷனை
எனக்கு நீங்க மாப்பிள்ளையா கொண்டு வரமுடியாது எனக்காக இன்று அவர் முழு வெஜிட்டேரியனா மாறியிருக்கார் என் பிரியத்துக்காக இந்து சமய பழக்க வழக்கங்களை மேற்கொண்டு இந்துவாக மாறியிருக்கார்.
நம்பிக்கையும் விசுவாசமும் உள்ள யோக்கியன் தான் உயர்ந்தஜாதி மனுஷன்னா அதுஎன் பீட்டர் என்ற ரகுதான் உங்களைவிட நம்மைவிட உயர்ந்தஜாதிக்காரர்,, நீங்கள் அவரை எத்தனை கேவலமாக விமர்சித்தாலும்
அவர் அதை பொரருட்படுத்தாமலும் சாத்வீகமாக நடந்து கொள்வதிலிருந்தேய்ஹெரியவில்லையா இவரல்லவா பரம வைஷணவர் இவரிடம் பொருந்திருக்கும் சகல் லட்சணங்களும் உங்கள் கண்ணில் ஏன் படவில்லை ? உங்களுக்கு இஷ்டமிருந்தால் எங்களுடன் இருங்கள் இல்லையெனில் தனி வீடெடுத்து வைக்கிறேன் உங்க பூஜை புனஷ்க்காரங்களுடன் நீங்க உயர்ந்த ஜாதிக்காரராகவே இருங்கள்.
கோபமாக வெளியேறிவிட்டார் ரெங்க நாதன் மனசஞ்லத்தோடு நடந்தவருக்கு எதிரில் வந்த கார் மோதியதில் தூக்கி எறியப்பட்டார்
சுவாதியும் ரகுவும் அவரை ஆஸ்பிடலில் சேர்த்து கவலயோடு நிற்க
டாக்டர் அவருக்கு ரத்தம் சேதமாகி விட்டதால் உடனடியாக ரத்தம் கொடுத்தாக வேண்டும் என்று சொல்ல ‘’’அவர் க்ரூப் ரத்தம் கிடைக்காமல்
ரகுவே ரத்தம் கொடுத்து காப்பாற்றினான் .சுவாதி அவருயிர் வாழ்வதற்கு
ரகுதான் காரணம் என்று வீட்டிற்கு வந்ததும் சொல்ல –தன் தவறுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டைனை என்று வெட்கித் தலை குனிந்தார் ரெங்க நாதன்

 எழுத்தாளர் ஆகலாம் வாங்க பகுதி 24 /முடிவு: 
*******************************************
முத்திரை எழுத்தாளர்கள் 
******************************
1)எழு.Rameshkumar
காலத்திற்கேற்ற கட்சிதமான கதை
2)எழு.Saraswathi Rajendran சாதிமறுப்பு காதல் திருமணம் & ரத்ததானம் சமூக விழிப்புணர்வோடு முடிவோடு பொறுத்தமாய் இருந்தது!


1 கருத்து: