செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புகைப்படபோட்டி ==51

சரஸ்வதி ராஜேந்திரன்
திரைக்கூத்தும் அரசியல் கூத்தும் இன்று
தெருக்கூத்தாய் பவனி வருகிறது பாரம்பரிய
தெருக்கூத்து பாதியிலேயே மறக்கடிக்கப்பட்டது
வேஷம் பலவிதம் மோசம் சாசுவதமாகிப்போனது
கோஷங்கள் போடுகிறார்சந்தடி சாக்கில் வருமானத்திற்கு
ஆனாலும் நாட்டிற்கு நல்லது செய்ய எண்ணி
ஆண் ஒருவர் ஓய்வு அடைந்தும் வேஷம் போடுகிறார்
நங்கைகள் கூடும் இடத்தில் தாய்ப்பால் அவசியத்தையும்
ஆடவர்கள் கூடும் இடத்தில் புகை பகை எனகூறி
சத்தான பேச்சால் விழிப்புணர்வு தூண்டுகிறார்
வித விதமான வேஷத்தால்,, ஏனெனில் ,மக்கள்
வேஷத்தில் பழகிவிட்டார்கள் என்று ஆம்
உலகமே ஒரு நாடக மேடை அதில்
உலவும் மக்கள் எல்லோரும் நடிகர்கள்தானே
தெருக்கூத்துப்போய் திருக்கூத்தாய் ஆனது கொடுமை

சரஸ்வதி ராஜேந்திரன் – கூத்தையும் வாழ்க்கை நாடகத்தையும் ஒன்றாக இணைத்து உவமை நன்று

2 கருத்துகள்: