ஞாயிறு, 10 ஜனவரி, 2016

தடாகம் டிசம்பர் மாதபோட்டி

                 தடாகம்

செழுங்கவிகள்    பூக்கின்ற      தடாகம்  இது
செந்தமிழ்        மணக்கின்ற    கூடாரம்
பணத்தவர்       இனத்தவர்     பார்ப்பதில்லை
குறைகள்         எவரும்       சொன்னதில்லை
நிறைகள்         ஒன்றால்      பரிமளிப்பு
வளமான         கவிதைகள்      படைத்திட
தளமாய்         துணை நிற்கும்  தடாகம்
புலமைக்கு       மதிப்பளிக்கும்  பாங்கு கண்டு
களமிறங்கி       வருகிறார்     கவிஞரெல்லாம்
இனிய தமிழ்     காக்கின்ற    தடாகத்தொண்டு
என்றும்எவரும்   போற்றும்    அருந்தொண்டு
கவிஞர்கள்      படைப்புகள்   யாவும் அழகு
கவியருவி    கவிதீபம்விருதுகள் வழங்கிடல்சிறப்பு   
இணையே     இல்லாத     இலக்கிய வட்டம்
துணையே     கவிஞரின்    கவி ஊற்றுகள்
போற்றிப்      பாடுவோம்      நாமே இந்த
தடாகப்       பெருமைகளைத்   தானே

சரஸ்வதி ராசேந்திரன்  புனை பெயர்-மன்னை சதிரா
51 வடக்குரத வீதி

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    அம்மா
    தடகாத்துக்கு அற்புதமான கவிதை கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு