சனி, 31 அக்டோபர், 2015

வல்லமை


வல்லமை இதழ் நடத்திய கர்ம வீரர் காமராசர் கட்டுரைபோட்டியில் என்
கட்டுரையையும் பரிசுக்குரியதாக (மூன்றாம் பரிசு) தேர்ந்தெடுத்துள்ளமைக்கு ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கும், ஊக்கம் கொடுத்தஐயா காவிரி மைந்தன் அவர்களுக்கும் என் மன மார்ந்த நன்றிகள்,வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வல்லமை குழுவினருக்கும் நன்றி

தடாகம் இலக்கிய வட்டம்


அக்டோபர் 16 வல்லமை இதழில் வந்தது

தமிழ் நாட்டின்
கோடியில் பிறந்தாலும்
கோடிக்கு ஆசைப்படாத கோமானே!
உன் நாடி நரம்பெல்லாம் இந்திய
நாட்டின் நலம் மட்டும்தானே!
ஜனாதிபதியானாலும் நீ
மாடி வீட்டுக்கு ஆசைப்படவில்லை
தேடித் தேடி அலைந்தாலும் உனைப்போல
தெய்வமகன் எங்களுக்குக் கிடைப்பாரா?
கூடிக்கூடி அழுதாலும் உன்னைக்
கூற்றுவன் திரும்ப விடுவானா?
ஆடிப் பாடி ஆண்டவனைத் தொழுதாலும்
ஆட்கொண்டவன் விடுவிப்பானா?
எத்தனையெத்தனை பதவிகள் ஏற்றாலும்
புகழ்போதை என்றுமே உனக்குப்
பொய்முகம் அணிவித்ததில்லை
மாணவர்களுக்கு வழிகாட்டியாய்
மக்களுக்கு நல்ல தலைவனாய்
அரசியல்வாதிகளுக்குப் பாடமாய்க்
குழந்தைகளுக்குப் பிடித்தவராய்
அனைவரையும் நல்ல மனத்தால்
ஆட்கொண்டாய் அன்பனே!
அப்துல்கலாமே! உன்னைக் காலனுக்குக்
காவு கொடுத்துவிட்டுக்
கையறு நிலையில் இந்தியாவே
கலங்கி நிற்கிறது
எழுந்து வா கலாமே…!

தமிழ்த்தேர் ஐப்பசி மாத கவிதை


தடாகம் இலக்கி வட்டம் நடத்திய செப்டம்பர் மாதபோட்டியில் வெற்றி பெற்றமைக்காககொடுக்கப்பட்டசான்றிதழ்

தடாகம்கலை இலக்கிய வட்டம் அக்டோபர் மாதம்

ஒக்டோம்பர் மாதப்போட்டிக்கவிதை
44 -வெற்றிக்கான வழி
இலட்சியமும் ஊக்கமுமே வெற்றிக்கான படி
அலட்சியமும் சோம்பலுமே அழிதலுக்கான வழி
பலமும் முயற்சியுமே வாழ்வின் அடையாளம்
பலவீனம் என்றுமே தாழ்வுக்கு அடிகோலும்
பிழையின்றி உழைத்தலே பெற்றுத்தரும் வெற்றி
உழைப்பு ஒன்றேதான் உயர்வுக்கான வழி
தோல்வியை ஒருபோதும் பொருட்படுத்தாதே
வேள்வியாய் வேலையை செய்தால் வெற்றி உறுதி
உழுத நிலம் இருந்து மழை இல்லாமல் விளையுமா
மழை மட்டும் இருந்து நிலம் உழுவாமல் பயன் உண்டா?
சிறகுகளை அசைக்காமல் பறவை பறக்க முடியுமா ?
விறகுக்கு தீவைக்காமல் நெருப்பு பற்றுமா ?
முயற்சி செய்யாமல் முன்னேற்றம் வருமா
அயற்சியை நீக்கி செயல் பட்டால்தான் வெற்றி வரும்
சரஸ்வதி ராசேந்திரன்

திங்கள், 26 அக்டோபர், 2015

வல்லமை புகைப்பட போட்டி --35

இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக என்னைத்தேர்ந்தெடுத்த வல்லமைக்குகுழுவினருக்கும் மேகலாராமமுர்த்திக்கும் நன்றி நன்றி
நாம் வாழும் உலகு அறத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? அல்லது…பணத்தைச் சார்ந்து இயங்குகின்றதா? என்றொரு பட்டிமண்டபம் வைத்தால் பணத்தின் பக்கமே நீதிபதி சாயவேண்டியிருக்கும். காரணம்… ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று பொய்யாமொழிப் புலவரே விளம்பிவிட்டாரே! அறச்செயல்கள் செய்வதற்குக்கூடப் பொருளின் துணையைத் தேடவேண்டியிருக்கின்றதே!
’குபேர பொம்மையை விற்றே குபேரனானவர்கள் உண்டு; ஆயினும் உண்மைப் புதையல்களை உழைப்பால் கண்டடைவீர்!’ என்று எளிய சொற்களில் எதார்த்தம் பேசும் இனிய கவிதை ஒன்று என் இதயம் கவர்ந்தது.--மேகலா ராமமூர்த்தி
அக்கவிதை…
உலகம் முழுதும்
உயிர்ப்பொருள் தெய்வம்
பணம் பணமே !
குபேரன் பொம்மைகண்டால்
குஷிகளில் உள்ளம்
குழந்தையாய் துள்ளும்
கீரிப்பிள்ளை
வீட்டிற்குள் வந்தால் கூட
குபேரன் வருவதாக
குறி சொல்லும்
அறியா மக்கள்
குறுக்கு வழியில்
குபேரன் ஆகத்தான்
குவலயமே விரும்புகிறது
குபேரன் பொம்மையை விற்றே
குபேரனானார்கள் பலர்
உண்மைப் புதையல்கள்
உழைப்பால்தான் வரும்
நம்புங்கள் குபேரனை
நம்பி உழையுங்கள்
உவகையுடன் வந்திடுவான்
குபேரனும்!
இந்தக் கவிதையை யாத்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

புதன், 7 அக்டோபர், 2015

வல்லமை புகைப்ப்ட போட்டி -32









விஞ்ஞானம் வளர்ந்தாலும் அஞ்ஞானம் அகலாத மக்கள் இன்னமும் திருஷ்டிப் பூசணியில் திருப்திகொள்கின்றனர் என்று கூறும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், பூசணியுடன் அதன் வியாபாரி ஆசையாய் எடுத்துக்கொண்ட செல்ஃபி இது! என்று இப்புகைப்படத்திற்கு விளக்கம் தருகிறார்.--மேகலா ராமமூர்த்தி




திருஷ்டி
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது
கண்ணேறு கழித்தல்என்பது
முன்னோர்கள் வாக்கு
அழகு அழகுன்னு
குழந்தையைகொஞ்சினா
கண்ணேறு படாமலிருக்க்
கன்னத்தில் வைப்பது
திருஷ்டி பொட்டு
புது வீடு கட்டினால்
புதிதான பூஷணிக்காயில்
படம் வரைந்து வாசலில்
திருஷ்டி பொம்மை
அகத்திய முனிவரே
கண் திருஷ்டியிலிருந்துவிடுபட
சுப திருஷ்டி கணபதி என்ற
மகாசக்தியைதோற்றுவித்தார்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
அஞ்ஞானம் மாறா மக்கள்
வரைந்த பூஷணிக்கு
திருஷ்டி படாமலிருக்க
வரை படம்போல்
அழகு காட்டி அதன்
அழகில் மயங்கி ஆசையுடன்
எடுத்துக்கொண்டான் ஒரு செல்ஃபி
ஆசை யாரை விட்டது?
சரஸ்வதிராசேந்திரன்