செவ்வாய், 1 செப்டம்பர், 2015

தடாகம் ஆக்ஸ்டு மாத போட்டி

ஆகஸ்ட் மாதப்போட்டிக் கவிதை
-மனிதனாக பிறப்பது பிறப்பன்று
மனித நேயத்தோடு இருப்பதே நன்று
இலட்சியம் இல்லா வாழ்க்கை வீணே
இலக்கற்ற வாழ்வில் சிறப்பேதுமில்லை
உழைப்பே என்றும் உயர்வைத்தரும்
உழையாதவன் வாழ்வு தளர்வைத்தரும்
பலமும் வளர்ச்சியுமே வாழ்வின் அடையாளம்
பலவீனம் என்றும் இழப்புக்கு அடையாளம்
தோல்வி எனும் எதிரியுடன் தினம் போராடு
திறமைக்கு அதுதான் நமக்கு சவாலு
மாற்றங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்
ஏற்றங்கள் ஏணியாக தானே அமையும்
தன்னை நம்பும் துணிவிருந்தால் என்றும்
விண்ணைத் தொடலாம் ஒரு நாளில்
முயற்சி பயிற்சி இரண்டுமிருந்தால்
முடியாதது இல்லை ஒத்துக்கொள்
நல்லது நடக்கும் என்று உறுதியுடன் உழை
நம்பிக்கைதான் உன்னை உயர்த்தும் நம்பு

சரஸ்வதி ராசேந்திரன்

2 கருத்துகள்: