திங்கள், 22 ஜூன், 2015

வல்லமை புகைப்பட போட்டி ---17

பொற்கதிரோன் அழகில் சொக்கி கவிபுனையாக் கவிஞரும் உளரோ? என்று கேட்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன், விடியாத இருளும் விலகாத துயரும் உலகிலில்லை எனும் நன்மொழிகளோடு கவிதையை நிறைவுசெய்துள்ளார்.saraswathirajendran wrote on 18 June, 2015, 11:03
மேகலா ராமமூர்த்தி

பாடம்
பொற்கதிர்       பரப்பி          வையம்
பூரிக்கபகல்      தந்த         கதிரோன்
அற்புதமாய்     வேலை     முடித்து
அழகாய்         மறைய       துவங்குகிறான்
செக்கச்          சிவந்த           வானம் அதில்
சீர்மிகு           பார்டராய்         நீலக்கடல்
கதிரவன்       மறையும்     நேரம்
பூக்கும்           மேகம்         பல வடிவாய்
சொல்லிட     இயலா       இன்பம்
சொட்டியே    நிற்கும்       அழகாய்
வாழ்வில்      இறப்பும்     பிறப்பும்
மாறி              மாறியே      வரும்என்று
அருமை     யாம்பாடம்    சொன்னாய்
அறிந்தோம்  அகக்கண்   திரைதனிலே
தினம் உன்   வருகை      மறைவு அழகை
இனிதாய்     காண்கிலேன்   எனில்
இம்மண்ணில்  கவிஞர்    கள்யாரோ?
சூரியன்        நிலவாய்     ஆகும் அங்கே
சுடர்பரப்பி    நிலவு      காலை சூரியனாகுமோ?
விடியாத     இருளும்   இல்லை
விலகாத     துயரமும்   இல்லை இது
இறைவன்  செய்யும்     லீலை 
சரஸ்வதி ராசேந்திரன்

2 கருத்துகள்: