சனி, 28 மார்ச், 2015

லெட்சுமியை அடிக்காதீங்க குமுதம் -24- 8-91

லெட்சுமியை அடிக்காதீங்க
அதிர்ந்து புலம்பினாள் மரகதம் , ''என்னங்க ,நிசமாலுமா சொல்றீங்க >நம்ம லெட்சுமியை வாங்கவா இந்த ஆளு
வந்திருக்காரு ?ஐயோ ஒரு வருஷமா ,இரண்டு வருஷமா கிட்டத்தட்ட நாலு வருஷமா இந்த லட்சுமி ஒரு நாலாவது
கறவை குறைஞ்சிருப்பாளா ?இவ வந்த பிறகுதானே நம்ம வீட்டுல பல நல்லது நடந்துச்சு ,இதைப்போய் விற்க
என்ன முடை வந்துச்சுன்னு விற்க நிற்கிறீங்க ?''
''இதைப்பாருடி ,இது உங்கப்பன் வீட்டு ஆஸ்தியிலே வாங்கின மாடு இல்லே ,நீஒப்பாரி வைக்க .என் இஷ்டம் வாங்கினேன்
என் இஷ்டம் விற்கிறேன் நீயாரு கேட்க ?போடி உள்ளே ''காட்டுக்கத்தலை கத்தினார் பரமசிவம்
உள்ளே போனாலும் புலம்பிக்கொண்டே போனாள் மரகதம்
தனக்கு முன்னால் நடந்த ரகளையைப்பார்த்து பயந்து போன ரங்கசாமி ,''என்னண்ணே ,வீட்டுல மாட்டை விற்க இஷ்டமில்லே
போலிருக்கே ,''என்றான்
''அட அதை விடுப்பா ,இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மாடு கோழின்னு பாசம் வைச்சுட்டு தவிப்பாலுக ,நீ பணத்தை எடு
ரங்கசாமி பேரம் பேசி ,இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கின லெட்சுமியை மூவாயிரத்து ஐநூறு ருபாய் பரமசிவம்
பிடிவாதமாக சொல்ல கடைசியாக நூறு ருபாய் குறைத்துக்கொண்டு இரண்டாயிரத்து தொலாயிரத்துக்கு வெற்றிகரமாக
பேரம் பேசி முடித்து விட்டதாக பெருமையுடன் நினைத்துக்கொண்டான்
''சரி அண்ணே ,உங்க சம்சாரம் கையாலே லெட்சுமியை பிடிச்சுக்கொடுக்க சொல்லுங்க ''என்றான் ரங்கசாமி
உள்ளேபோய் பரமசிவம் மரகதத்தை மாட்டை பிடித்துக்கொண்டு வரச்சொல்ல --ஏதோ சொந்த பெண்ணை பலி
கொடுப்பதுபோல எண்ணி மரகதம் ஒப்பாரி வைத்தபடியே மாட்டை பித்து வந்தாள்
பயந்து போன ரங்கசாமி ,''இதைப்பாருங்கம்மா ,வாங்கிற நாங்களும் நல்லாயிருக்கனும் ,விற்கிற நீங்களும்
நல்லாஇருக்கனும்னு நான் நினைக்கிறேன் ,சந்தோஷமா பிச்சு கொடுக்கிறதா இருந்தா நான் வாங்கிக்கிறேன் இல்லே--''
பரமசிவம் மரகதத்தை முறைக்க ---''இல்லண்ணே ,நாலு வருஷமா வளர்த்திட்டேனா அதான் ,---என் லெட்சுமியை
நல்லா பார்த்துக்குங்க .....அடிக்காதீங்க ''வாழ்த்தி மாட்டை பிடித்துக்கொடுத்தாள் மரகதம் .
ரங்கசாமி சந்தோஷமாக மாட்டை பிடித்துக்கொண்டு நடந்தான் .அவன் தெரு முனையை அடைந்ததும் கண்களைத்துடைத்துக்
கொண்டு உள்ளே வந்த மரகதம் ,''அந்த ஆசாமி எங்க வாங்காம போயிடுவானோன்னு பயந்தே போய்ட்டேங்க நல்ல வேளை ''
''பைத்தியம் நீ ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்திட போகிராயோன்னு நானில்ல பயந்துட்டேன் ஏமாந்தவன் கிடைச்சா
விட்டிருவேன்னா சனியன் நம்ம விட்டு தொலைஞ்சுது விடு ,இரண்டு நாளைக்கு இந்த ஊரிலே இருக்கக்கூடாது கிளம்பு ''
என்று வெளிஊருக்கு கிளம்பினர்
குமுதம் 24-8-91

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக