சனி, 28 மார்ச், 2015

தமிழ்த் தேர் ---2014 கவிதையும் கற்பனையும்

கவிதையும் ,கற்பனையும்
நடக்க முடியாத செயல்களை
மனச் சித்திரங்க ளாகப்பார்ப்பதும்
நடை பெறாத செயல்களை
செயல் வடிவங்களில் பொருத்திபார்ப்பதும் கற்பனை
கருவறைக்குள்ளே கடவுள் இருப்பதுபோல்
கவிதைக்குள்ளே கற்பனை இழையோடும்
கற்பனைக் குதிரையில் ஏறினால்தான்
கவிதைத் தேரையே இழுக்க முடியும்
கவிதையும் கற்பனையும் இரட்டைப் பிறவிகள்
ஒன்றில்லமல் ஒன்று இல்லை
கவிதைக்கு பொய் அழகு அந்த
பொய்யே கற்பனையின் வெளீயீடு
மூலையிடம் தேடி மூக்கு முனைபார்த்து
சீர்கோத்து தளை நோக்கி அமைக்கும்
கவிதையில் கற்பனையில்லையெனில்
அதில் சாறும் இருக்காது பொருளும் அமையாது
கற்பனை கலந்து சொற்களைத்
தெளிக்கும் கவிதைச் சாரல்
உள்ளத்தை உருக்கி உண்ர்வில் நிறைந்து
உலவிடும் இனிமை சூழல்
கருத்துக்கேற்ப சொற்களை வசப்படுத்தி
கவிதையில் அழகுப்படுத்துவதே கற்பனை
கவித்துவம் இன்றி கவிதை இல்லை
கற்பனையின்றி கவிதையில் சுவை இல்லை
கவிதையின் அடிப்படை இலக்கணம் ஆனால்
கவிஞர்கள் இலக்கணம் பார்த்து பாடுவதில்லை
புலவன் பாட்டு பாடினால் அதில்
இலக்கணம் தானே அவ்ன் பின்னால் ஓடிவரும்
கவிதைக்கு உயிரூட்டுவது ஓட்டம் அது
கவிஞனுக்கு இயல்பாக வரும் ஊற்று
கற்பனைச் செறிந்த கவிதை அது
அற்புதமாய் நிறைக்கும் மனதை
கற்பனையில் மனம் கரைவோம்
கரைந்தே கவிதை வரைவோம்
சரஸ்வதி ராசேந்திரன்
மன்னார்குடி
தமிழ்த்தேர் ----2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக