புதன், 24 செப்டம்பர், 2014

இண்டர் வ்யூ

இன்டர் வ்யூ
மகன் அருணை விட அவனது தாய் சரோஜாவும்,தந்தை ராமமூர்த்தியும்தான் ஒரே டென்ஷனாக இருந்தார்கள்
‘’இதோ பார் ,அருண் நீரொம்ப பொறுமையாக இருக்கணும் ,இன்டர்வூன்னா சம்பந்தமில்லாமல்தான் கேள்வி கேட்பாங்க அதுக்காக கோவிச்சுக்கிட்டு வந்தா ,,யாருக்கு நஷ்டம்? முன்பெல்லாம் நேர்மை இருந்தது ,ஒரு பண்பு இருந்தது இப்ப காலம் மாறிப்போச்சு,,எது கேட்டாலும் பொறுமையா பதில் சொல்லு , நீ இந்த தடவை ரிஜெக்ட் ஆகாமல் இருக்கணும்
அப்பதான் எங்களுக்கும் நிம்மதி புரியுதா ?பார்த்து நடந்துக்க ‘’
சரோஜா சொன்னாள்
‘’ஆமாப்பா, நீ ரொம்ப பொறுப்போடு நடந்துக்குவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு,,பார்த்து நடந்துக்க,குண்டக்க,மண்டக்க கேட்டாலும் கோபப்படாதே’’ராம மூர்த்தி கவலையோடு சொன்னார் .

‘’ நான் பார்த்துக்கிறேன் நீங்க கலைப்படாதீங்க’’ தைரியம் சொன்னான் அருண்
இண்டர்வூக்கான நேரம் நெருங்க, நெருங்க பயம் கவ்விக்கொண்டது பெற்றோர்களுக்கு, அருகில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு ஓடி மகன் தேர்வு ஆகவேண்டுமே
என்று வேண்டிகொள்ள ஓடினர்
அருண்
உள்ளே போய் வணக்கம் கூறினான்
‘’ நீங்க போடுகிற் டிரஸெல்லாம் யார் செலக்ட் பண்ணுவாங்க?’’
இதென்ன கேள்வி பையித்தியக்காரத்தனமால்ல இருக்கு,கோபம் வந்தாலும் பெற்றோர்களை நினைத்து பொறுமையானான்
‘’ நாந்தான் செலக்ட் பண்ணுவேன் சமயத்திலே அம்மாவும் பண்ணுவாங்க’’
’’உங்க சம்பளத்தை யார்கிட்ட கொடுப்பீங்க முதலில்?’’
‘’அம்மாகிட்டதான் ,’’
‘’மனைவி வந்தபிறகு ?’’
‘’ முதல் மரியாதை பெற்றவர்களுக்குத்தான்’’
இன்னும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன, ஆனாலும் திருப்தி இல்லாததால் அருண் நிராகரிக்கப்பட்டான்

“ஏண்டா நீ இப்படி அ நியாயத்துக்கு நல்லவனா இருக்கே ,அதனாலதான் முப்ப்த்தைந்து வயதாகியும் எந்த பெண்ணுமே உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டேன்கிறாள் அவ்ள்கேட்ட கேள்விக்கு நீ ஒகே சொல்லியிருக்கலாமே’’
‘’அம்மா நீ உங்க அம்மா,அப்பாவை விட்டுட்டு என் கூட வரணும்னு சொல்றாள் , நான் சொன்னேன் நீயும் உங்க அம்மா அப்பாவை விட்டுட்டு இருந்தால்...எனக்கும் ஒகேன்னு சொன்னேனே .’’,கோபப்பட்டு எழுந்து போயிட்டாள்
’’ எங்களைப்பற்றி நீஎண்டா கவலைப்படுறே,போடா பொழைக்கத்தெரியாத பிள்ளையாய் இருக்கிறியே’’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக