திங்கள், 23 ஜூன், 2014

முகநூல்

முகுந்தை பிரியப்பட்டுதான் திருமணம் செய்து கொண்டாள் மலர் ,ஆனால் ஆறு மாதத்திற்குள் அவனை பிடிக்காமல் போய்விட்டது அவளுக்கு .அவனை எப்படி வெட்டி விடுவது ?என தீவிரமாக யோசித்தாள் .ஆனால் அவனோ அவளிடம் பிரியமாத்தான்
இருந்தான் கோர் ட் டு க்குபோனால் கூட ஆ று மாதமாகவாவது பிரிந்து வாழணும் என்று சொல்வார்கள் ,அதனால் ,அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தால் பின் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டில் இருந்தாள் .ஆறு மாதம் கழித்து வக்கீல் ஒருவரை பார்த்து பணம் கொடுத்து தனக்கு சாதகமாக பேசச்சொன்னாள்
அவனை விவாகரத்து செய்ய தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னாள் தனக்கு அவனிடமிருந்து ரத்து வாங்கித்தரும்படி கேட்டாள் '
அவளுடைய ஆதாரங்கள் முழுமையாக இருந்ததால் கோர்ட் அவளுக்கு ரத்து வாங்கி தந்தது .
முகுந்தோ அந்த ஆதாரங்கள் பொய் என்று சொல்லிபார்த்தான் அவன் வாதம் எடுபட வில்லை இன்றும் அவளுடன் வாழவே ஆசைப்பட்டான் .மலருடைய வக்கீலுக்கு ஆச்சரியமாக இருந்தது .அவனைப்பற்றி விசாரித்ததில் அவன் மலர் சொன்னதுபோல்
எந்த பெண்ணுடனும் அவனுக்கு தொடர்பில்லை ,பின் மலர் ஏன் இப்படி? ஆதாரம் எப்படிவந்தது ?குழம்பிய வக்கீல் அவளிடமே இது பற்றி கேட்டார்
விவாகரத்துதான் கிடைச்சுட்டுதே இனி உங்களிடம் சொன்னால் என்ன?சார் அவருடைய முகநூலில் அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன் ,அதேபோல இன்னொரு பெண்ணினுடைய
பெயரில் கற்பனையாக ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருவரும் அடிக்கடி அசிங்க அசிங்கமா பேசுவதுபோல் நானே சாட் செய்தேன் ,மாற்றி மாற்றி ஆன் லைனில் இரவரும் சரசமாடுவதுபோல் நானே பதிவு செய்து ,அதை பீரிண்ட் அவுட் பண்ணினேன் அந்த காப்பியைத்தான் கோர்டில் ஆதாரமாக காட்டினேன் .இந்த வசதி கம்பியூட்டரில் மட்டும்தானே கிடைக்கும் ,என்று சர்வ சாதாரணமாக சொன்னாள் .
இது நம்மை விட மோசமா சிந்திச்சு இருக்கே என்று அதிர்ந்துபோய் நின்றார் வக்கீல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக