திங்கள், 23 ஜூன், 2014

வீடு --தினமலர்-பெண்கள் மலர்--19-6- 2010


'வீட்டுக்கு ஒரே பையன்தான்
' அவனுக்கு கூட பிறந்தவங்க யாரும் கிடையாது .அப்பா அம்மா மட்டும்தான் பையன்தான் . கூட இருக்காங்க
பிக்கல் பிடுங்கல் கிடையாது நம்ம பாப்பா வேலை பார்க்கிற கம்பெனிக்குபக்கத்தில இருக்கிற பாங்கில்தான் பையனுக்கு வேலை .தனிக்குடித்தனம்தான் ....என்ன சொல்றிங்க ?"தரகர் கேட்டார்
உஷாவுக்கும்மோகனுக்கும் இந்த இடம் பிடித்து போனது ,தன்மூத்த மகனிடமும் மருமகளிடமும் விவரம் சொன்னார்கள்
அவர்களும் ஓகே சொல்லி பேசி முடிக்க சொன்னார்கள்
"உஷா..நம்ம பையன் கிட்டேயும் மருமகள்கிட்டேயும் கேட்டுட்டோம் கல்யாணம் பண்ணிக்கப்போற தர்ஷினிகிட்டே கேட்கவேண்டாமா ?'என்றார் மோகன் ,

.
''அவ இந்த காலத்து பெண்ணுங்க ,இப்படி பட்ட சான்சை வேண்டாம்னா சொல்லுவா ?எதற்கும் கேட்போம் '"என்றாள்உஷா
வேலை முடிந்து வந்த தர்ஷினியிடம் தரகர் சொன்ன விவரங்களை சொன்னார்கள் தேடினாலும் இது போன்ற இடம் .
கிடைக்காது என்றார்கள் .எல்லாவற்றையும் கேட்ட தர்ஷினி" உங்களுக்கெல்லாம் இதில் சம்மதமா ?"கேட்டாள்
"'எங்களுக்கெல்லாம் பிடிச்சதினாலேதான் கேட்கிறோம் ,ஏன் உனக்கு பிடிக்கலையா ?"
.""வீடு என்பது வாழறதுக்கு ....நான் வாழ னுமும்னு நினைக்கிறேன் ."
அப்படின்னா "
"நாலு பேரோட சந்தோஷமாவாழறது தான் வாழ்க்கை ,இங்கே எப்படி அம்மா அப்பா ,அண்ணன் ,அண்ணின்னு கூட்டு குடும்பமா வாழ்றேனோ அப்படித்தான் புகுந்த வீட் லேயும் வாழ ஆசைப்படுகிறேன் .ஆபீஸ் விட்டு வந்து இரண்டு பேரும்
அடைபடுகின்ற கூடுகளாய் வீடுகள் மாறுவது எனக்கு பிடிக்கலே .தனிக்குடித்தனம் என்பதுவசித்தலுக்கானகூடு
வீடு என்பது பலருடன் விட்டுக்கொடுத்து வாழ்தலுக்கானது நீங்க பார்த்திருக்கிற பையனோட அப்பாவும் அம்மாவும் எங்ககூட
சேர்ந்து ஒரே வீட்டுல இருப்பாங்கன்னா இந்த இடம் ஓகே இல்லன்னா வேற இடம் தேடுங்க .''என்றாள் தர்ஷினி தீர்மானமாய்.
பெற்றவர்கள் வியப்பாய் அவளை பார்த்தார்கள்
தினமலர் -பெண்கள்மலர் - ஜூன் 19 - 6 - --2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக